தொடர்ந்தும் விளக்கமறியலில் பூஜித், ஹேமசிறி!!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போதே அவர்களை எதிர்வரும் 3ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈஸ்டர்  தாக்குதலை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்காதமை காரணமாக இவர்கள் இருவர் மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதனை அடுத்து கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த இருவரும் மேல் நீதிமன்ற உத்தரவை அடுத்து, கடந்த 09 ஆம் திகதி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.