ஆமை இறைச்சியுடன் இருவர் கைது!!

மன்னாா் கடற்கரை பகுதிகளில் நடாத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது 14.5 கிலோ ஆமை இறைச்சியுடன் இரு சந்தேகநபா்களை கடற்படையினா் கைது செய்துள்ளனர்.


வட மத்திய கடற்படை கட்டளை சவுத்பார் கடற்கரையில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான ஒரு படகு கரைக்கு திரும்புவதைக் அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த படகை சோதனையிட்டபோது அதில் ஆமை இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சந்தேக நபர்கள் இருவரையும் ,குறித்த மீன்பிடி படகையும் கடற்படையினா் கைது செய்தனர்.

சந்தேகநபர்கள் இருவரும் மன்னாரில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், படகு மற்றும் ஆமை இறைச்சி ஆகியவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மன்னார் உதவி மீன்வளத்துறை அதிகாரியிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.