வளிமண்டலவியல் திணைக்த்தின் அறிவிப்பு!!

இலங்கையின் வளிமண்டலத்தில் உள்ள தூசு படிமங்களின் செறிவு தற்போது குறைவடைந்துள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.


அதன் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் வளிமண்டத்தில் அண்மைக் காலங்களில் இருந்த தூசு படிமங்களின் செறிவு குறைவடைந்துள்ளதை காணமுடிகின்றது.

இந்தியாவில் நிலவிய காற்றுடன்கூடிய காலநிலை குறைவடைந்துள்ளமை இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

எவ்வாறிருப்பினும், வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் நச்சுக் கழிவுகள் என்பனவற்றினால் வளிமண்டலம் மாசடைவதற்கான வாய்ப்பு உள்ளது.

எனவே, குறித்த காரணங்கள் உள்ளிட்ட நிலைமைகளுடன், நாட்டில் ஏற்படும் மாற்றங்களுக்கு அமைய இந்த நிலைமை தொடர்வதற்கான வாய்ப்புள்ளது.

இதேநேரம், காலநிலை தன்மையுடனும் இந்த நிலைமை நீடிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.