பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள செய்தி!!

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தில் மக்களுக்காக முன்வைக்கப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்டத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


குருநாகலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தமது அரசாங்கம் தேர்வாகியுள்ளதுடன், இது தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்ட அரசாங்கமாகும்.

இந்த நிலையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முதலாவது அமைச்சரவை கூட்டம் இடம்பெறும் தினதிதலிருந்து தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், விரைவில் பொது தேர்தலை நடத்தி அதில் வெற்றி பெறுவதன் ஊடாக உள்நாட்டு மற்றும் சர்வதேச சக்திகளை தோல்வியடைய செய்து முன்நோக்கி பயணிக்க உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.