பெப்ரல் அமைப்பின் முக்கிய கோரிக்கை!!
தேர்தல் நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கும் வேட்பாளர்கள் செலவிடக்கூடிய அதிகபட்ச நிதியை வரையறை செய்வதற்கான சட்டமூலத்தை, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்றிக்கொள்ளுமாறு, பெஃவ்ரல் அமைப்பு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த சட்டமூலத்திற்கு சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அனுமதி கிடைத்துள்ளதாக, அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்வது இலகுவாக அமையுமென அவ்வமைப்பினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மிக நீண்ட காலமாக நடத்தப்படாது இருக்கும் மாகாண சபைகளுக்கான தேர்தலையும் விரைவில் நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இந்த சட்டமூலத்திற்கு சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அனுமதி கிடைத்துள்ளதாக, அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்வது இலகுவாக அமையுமென அவ்வமைப்பினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மிக நீண்ட காலமாக நடத்தப்படாது இருக்கும் மாகாண சபைகளுக்கான தேர்தலையும் விரைவில் நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை