ஐ.தே.க.வின் ஆதரவை கோரும் பொதுஜன பெரமுன!!

பாராளுமன்றத்தை கலைப்பதற்கு தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை பெற ஐக்கிய தேசிய கட்சிய ஒத்துழைக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


பத்தரமுல்ல - நெலும்மாவத்தையில் பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கொள்கைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலே மக்கள் அவரை வெற்றியடையச் செய்துள்ளனதாக கூறிய அவர், மக்களின் தீர்மானத்தை செயற்படுத்த வேண்டும் என்றால் பாராளுமன்றத்தின் ஆதரவும் அதற்கு மிக முக்கியமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பாராளுமன்றத்தின் ஆதரவின்றி எந்த செயற்பாடுகளையும் ஜனாதிபதியால் முன்னெடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை உடனடியாகவே கலைக்க முடியாதுள்ளதோடு, எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதிக்கு பின்னரே பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் அவருக்கு உண்டு எனவும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார் .

எனினும் இதற்கான ஆதரவினை ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும், இதுவே ஜனநாயகத்தை பிரதிபலிக்கும் செயற்பாடாக அமையும் எனவும் பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.