அமைச்சர்கள் நியமனம் பிற்போடப்பட்டமைக்கான காரணம்!!

புதிய இராஜாங்க அமைச்சர்கள் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார்கள் என ஜனதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.


எனினும் இன்று அந்நிகழ்வு இடம்பெறாத நிலையில் எதிர்வரும் புதன்கிழமை வரை குறித்த நியமனம் வழங்கல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு ஒத்திவைக்க காரணம் இராஜாங்க அமைச்சர்கள் பதவிக்காக இதுவரை உறுதியாக எம்பிக்கள் தேர்வு செய்யப்படாமையே எனவும் குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை கடந்த கிழமை நியமனம் பெற்ற அமைச்சரவை அமைச்சர்களின் விடயப்பரப்பு வர்த்தமானி மூலம் இதுவரை வெளியிடப்படவில்லை.

இருப்பினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிலர் உள்ளடங்கலாக இராஜாங்க அமைச்சர்கள் 20 பேர் புதன்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.