செம்மறியாடுகளுடன் கவிழ்ந்த கப்பல்!!

ருமேனியாவின் கரையோரத்தின் கருங்கடல் பிராந்தியத்தில் செம்மறியாடுகளுடன் கவிழ்ந்த சரக்குக் கப்பலில் உயிருடன் இருக்கும் ஆடுகளை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


சரக்குக் கப்பலில் சுமார் 14,000 செம்மறியாடுகள் இருந்ததாகவும், இதுவரை 50 க்கும் மேற்பட்ட ஆடுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சரக்குக் கப்பலின் அடிப்பகுதியில் ஆயிரக்கணக்கான செம்மறியாடுகள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

செம்மறியாடுகளை ஏற்றிச் சென்ற Queen Hind எனும் கப்பல் ருமேனியாவிலிருந்து சவுதி அரேபியாவுக்குச் செல்லும் வழியில் விபத்துக்குள்ளானது.

கப்பலில் இருந்த மாலுமிகளும் உதவியாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்தநிலையில், கப்பலின் சரக்குக் கிடங்கில் உள்ள செம்மறியாடுகளை உயிருடன் மீட்டுவிடலாம் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.