ஹொங்கொங் விமான நிலையத்தில் போதைப்பொருள்கள் ​ பறிமுதல்!

ஹொங்கொங்கில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் 42.1 கிலோகிராம் போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவற்றின் மொத்த மதிப்பு சுமார் 3.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த இரண்டு கடத்தல் சம்பவங்களும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளன.

முதல் சம்பவத்தில், விமானம் மூலம் மலேசியாவிலிருந்து ஜப்பான் வழியாக ஹொங்கொங்கிற்கு வந்த 5 தொலைக்காட்சிப் பெட்டிகளில் 28.6 கிலோகிராம்போதைப்பொருள் இருந்துள்ளது.

இரண்டாவது சம்பவத்தில் பிரசல்ஸில் இருந்து ஹொங்கொங்கிற்கு வந்திறங்கிய இரண்டு பேர் அவர்களது பயணப் பைகளில் சுமார் 13.5 கிலோகிராம் போதைப்பொருட்களை வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.