போதைப் பொருட்கள் அற்ற சிறைச்சாலை!!

போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல் தொடர்பான ஐக்கியநாடுகள் சபையின் அலுவலகத்தின் பணிப்பாளர் மற்றும் அவ்அமைப்பின் சர்வதேச கடல் குற்றத் தடுப்பு வேலைத்திட்டத்தின் தலைமை அதிகாரி எலென் கோலே உள்ளிட்ட குழுவினர் நீதி மனித உரிமை மற்றும் நீதி மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் ஸ்ரீபாலடி சில்வாவை சந்தித்துள்ளனர்.


இந்த சந்திப்பானது இன்று நீதி மனித உரிமைகள் மற்றும் நீதி மறுசீரமைப்பு அமைச்சில் இடம்பெற்றது.

இதன்போது இலங்கை சிறைச்சாலைகளில் போதைப்பொருள் பாவனை மற்றும் சிறைச்சாலைகளில் இருந்து போதைப்பொருள் விற்பனையை முன்னெடுப்பது தொடர்பான விடயங்கள் குறித்து மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன் சர்வதேச தரத்திலான அறிவு மற்றும் நடைமுறை மூலோபாயங்களை எவ்வாறு கடைப்பிடிப்பது என்பது குறித்தும் விரிவான முறையில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இந்த முறையின் மூலம் இலங்கை சிறைச்சாலைகளில் போதைப் பொருட்கள் அற்ற சிறைச்சாலை சுற்றாடலை தயார் செய்வதற்கு தேவையான தொழில் நுட்பம் மற்றும் ஏனைய ஒத்துழைப்புக்களை வழங்க ஐக்கிய நாடுகள் அமைப்பு தயாராக உள்ளதாகவும் இதன் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.