ஜனாதிபதியின் பெயரை பயன்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை!!

சில தனி நபர்கள் மற்றும் குழுக்கள் தமக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிவித்து, மக்களை ஏமாற்றி தவறாக சலுகைகளை பெற்றுக்கொள்ள முயற்சித்து வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.


மோசடியில் ஈடுபட்டுவரும் குறித்த நபர்கள் பல்வேறு பதவிகள், நியமனங்கள், டென்டர்கள் போன்றவற்றை பெற்றுக்கொடுக்க முடியும் என மக்களை ஏமற்றிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அவர்களில் சிலர் ஜனாதிபதிக்கு தங்களால் அழுத்தம் கொடுக்க முடியுமென்றும் தெரிவித்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

இதேவேளை எப்போதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமைகள் மற்றும் நடைமுறைகளுக்கேற்ப செயற்படுவதே ஜனாதிபதி ராஜபக்ஷவின் உறுதியான கொள்கையாகும்.

எனவே இத்தகைய மோசடிக்காரர்களை நம்பி ஏமாற வேண்டாமென ஜனாதிபதி அலுவலகம் மக்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றது.

மேலும் ஜனாதிபதியின் பெயரைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் இவ்வாறான மோசடியாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட ரீதியாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.