10 வருடமாக ஒழித்து வைக்கப்பட்டுள்ள அம்புலன்ஸ் வண்டி!!

நானூயா டெஸ்போர்ட் தோட்டத்தில் அம்புலன்ஸ் வண்டி தோட்ட 2வது அதிகாரி வீட்டில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தோட்ட மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.


கடந்த 30 வருடங்களுக்கு முன் தோட்ட பொதுமக்களும் நிர்வாகமும் இணைந்து நிதி செலவழித்து அம்புலன்ஸ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 10 வருடங்களாக அம்புலன்ஸ் பாவைனையில் இல்லை.

இதனால் தோட்ட பொதுமக்கள் பாரிய அசௌகரியத்துக்கு உள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டுமென்றால் முச்சக்கரவண்டியிலேயே செல்ல வேண்டியுள்ளது.

வசதியற்ற குடும்பங்கள் பெரும் அவஸ்தைக்கு உள்ளாகின்றனர்.இது தொடர்பாக தோட்ட நிர்வாகத்திடம் முறையிடப்பட்ட போது பழுது பார்க்கும் நிலையத்தில் இருப்பதாக கூறுவதாக கூறுகின்றனர்.

ஆனால் குறித்த அம்புலன்ஸ் வண்டி டெஸ்போர்ட் தோட்ட 2வது அதிகாரி வீட்டில் இருப்பதாகவும் இலக்கத்தகடு அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே உரியவர்கள் தலையிட்டு அதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு நானூயா டெஸ்போர்ட் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.