பிரபல இயக்குநர் பாக்யராஜ் மீது வழக்குப்பதிவு!

பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக இயக்குநர் கே.பாக்யராஜ் மீது ஆந்திர பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


அண்மையில் இடம்பெற்ற  திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த இயக்குநர் கே.பாக்யராஜ், பெண்கள் குறித்த சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

குறித்த விழாவில் பேசிய அவர்,  ”பெண்கள் குடும்பத்தை, கணவனை விட்டுவிட்டு வேறு ஒருவருடன் தகாத உறவு வைத்தால் கணவனையோ அல்லது குழந்தைகளை கொல்லும் அளவுக்கு துணிகிறார்கள் என்றும் இதனால் பெண்கள் முறை தவறும் போது குடும்பத்தில் விபரீதம் நடப்பதாகவும்” விமர்சித்தார்.

அத்துடன் பொள்ளாச்சி சம்வத்தில் பெண்களும் ஒரு காரணம் எனத் தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர மாநில மகளிர் அமைப்பு கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் தற்போது கே.பாக்யராஜ் மீது ஆந்திர மாநில பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.