பூநகரி செல்வபுரம் பகுதியில் விபத்து!!

கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கப் வாகனம் ஒன்று பூநகரி- செல்விபுரம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


வேக கட்டுப்பாட்டை இழந்து கப் வாகனம் வீதி ஓரத்தில் இருந்த மரமொன்றுடன் மோதியதில் வாகனத்தில் பயணித்த நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த சாரதி மற்றம் உதவியாளர் ஆகியோரே படுகாயங்களிற்குள்ளாகியுள்ளனர்.

மரத்துடன் மோதுண்டமையால் வாகனம் பலத்த சேதமடைந்தள்ள நிலையில், காயமடைந்த இருவரும் பலத்த பிரயத்தனங்களுக்கு மத்தியில் மீட்கப்பட்டுள்ளனர்.

அதோடு வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்த இருவரும் சாதாரண காயங்களிற்குள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர்களில் மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , மற்றையவர் பூநகரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை விபத்து இடம்பெற்ற குறித்த பகுதியில் கடந்த 23 ஆம் திகதி அன்றும் இரு பார ஊர்திகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் நால்வர் படுகாயடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.