இலங்கைக்கு 400 மில்லியன் வழங்கவுள்ளது இந்தியா!!

உத்தியயோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இந்திய பிரதமருக்கு இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை ஒன்று இன்று மதியம் இடம்பெற்றது.


இரு தரப்பு பேச்சுவார்த்தையின் பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் இணைந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தனர்.

இதன்போதே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் இந்திய பிரதமருக்கு இலங்கை சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த 400 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குறித்த நிதியில் , பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கவுள்ளதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.