கட்டுநாயக்காவில் ஜனாதிபதி கோட்டாபய!!

இந்தியப்பிரதமர் நரேந்திரமோடியின் அழைப்பினை ஏற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ நேற்று நண்பகல் இந்தியாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.


இரண்டு நாட்கள் உத்திய்போகபூர்வ விஜயமாக அவர் இந்தியா சென்றுள்ளார்.

இதன்போது கட்டுநாயக்கா விமான நிலையத்தில் ஜனாதிபதி கோட்டாபய பயணிகளுடன் சர்வசாதாரணமாக எந்தவொரு சிறப்புரிமையும் பெறாது சென்றமை பலருக்கும் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை பொதுவாக உத்தியோகபூர்வமாக செல்லும் சாதாரண அதிகாரிகளே பெரும் அலப்பறையுடன் தான் செல்வார்கள்.

அதிலும்தனி விமானத்தில் செல்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

கடந்த காலங்களில் இருந்த ஜனாதிபதிகளும் அதற்கு விதிவிக்கால இருந்ததில்லை.

இந்நிலையில் இவ்வாறான சம்பவங்களையே பார்த்து பழகிய மக்களுக்கு எவ்வித பந்தாவும் இல்லாமல் ஜனாதிபதி கோட்டபாயவின் இந்த வெளிநாட்டு பயணம் மிகவும் சர்வசாதாரணமாக அமைந்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்துயுள்ளது.

இது தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டுள்ள அவர்கள் , ஜனாதிபதியின் மக்களோடு மக்களாக செல்லும் இந்நிலை தொடருமா எனவும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அது மட்டுமல்லாது இன் நிலை நீடித்தால் இது புதிய மாற்றமாக பதிவு செய்யப்படும் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.