ஜனாதிபதி கோட்டா - மோடி சந்திப்பு!

3 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பையேற்று நேற்று இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கு புதுடில்லி விமான நிலையத்தில் வைத்து இந்திய மத்திய அமைச்சர் வி.கே.சிங் வரவேற்பு அளித்திருந்தார்.

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் அவர் மேற்கொண்ட முதலாவது உத்தியோபூர்வ வெளிநாட்டு பயணமாக இந்தியா விஜயம் அமைந்துள்ளது.

அந்தவகையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த கோட்டாபய ராஜபக்ஷ தற்போது ராஷ்டிரபதி பவனில் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தை அடுத்து பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளும் அவருக்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.