முகநூலில் புகைப்படத்தை பகிர்ந்த இருவர் கைது!

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை முகநூலில் பகிர்ந்த இருவர் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.


ஹொரணை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதான நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக ஹொரணை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.