தென்னிலங்கை ஊடகம் ஒன்றின் மாவீரர் நாள் பதிவு!

தமிழர்தாயகம் எங்கும் மட்டுமல்லாது புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர் நாள் நேற்று முன் தினம் அனுஸ்டிக்கபட்டிருந்தது.


இந்நிலையில் சிங்கள் ஊடகம் ஒன்று தாயக பகுதிகளில் நினைவேந்தப்பட்ட மாவீரர் நாள் தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் விடுதலைப்புலிகள் அமைப்பிலும் மற்றும் அது சார்ந்தவர்கள் சம்ப்ந்தப்பட்ட மாவீரர்களின் நினைவேந்தல் வடக்கின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி,வவுனியா போன்ற பிரதேசங்களில் மாவீரர்களிற்கான நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அஞ்சலி இடம்பெற்ற சில இடங்களில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும் குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் பொது மக்கள் மட்டுமன்றி , வடக்கின் அரசியல் பிரமுகர்கள், மற்றும் மத தலைவர்களும் கலந்துகொண்டதாகவும் குறித்த தென்னிலங்கை ஊடகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.