தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கிய கூட்டம்!

தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் முக்கிய செயற்பாட்டாளர்களுக்கிடையிலான கலந்துரையாடல் கூட்டம் ஒன்று இன்று அட்டன் இந்திரா விருந்தக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தேசிய அமைப்பாளர் நகுலேஸ்வரன் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வு தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப், தொழிலாளர் தேசிய முன்னணியின் உப தலைவர் ராம், இளைஞரணி தலைவர் சிவநேசன், நிர்வாகப் பணிப்பாளர் நந்தகுமார் உட்பட தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் முக்கிய செயற்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க அரசியல் நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அரசியல் நடவடிக்கைகள் குறித்து செயற்பாட்டாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

அத்துடன் நாளை மறுதினம் ஹட்டன் டி.கே.டப்ளியு கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ள அமரர் வி.கே. வெள்ளையன் அவர்களின் நாற்பத்தெட்டாவது நினைவு தின நிகழ்வுகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.