பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய திருவிழா!!

வரலாற்று சிறப்பு மிக்க மன்னார்- பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய திருவிழாவிற்கான கொடியேற்றம் வெகு விமர்சையாக இடம்பெற்றுள்ளது.


குறித்த கொடியேற்றம் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு இடம்பெற்றது.

இதன்போது புனித வெற்றி நாயகி அன்னையின் கொடி மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையின் கொடி வான் உயர ஏற்றப்பட்டது.

குறித்த திருவிழா, புனித வெற்றி நாயகி ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை தேவராஜா கொடுதோர் மற்றும் உதவி பங்குத்தந்தை ரஞ்சன் சேவியர் அடிகளார் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்றது.

மேலும் நவநாள் திருப்பலியை இந்தியா- கும்பகோணம் மறை மாவட்டம் மறை உரைஞர் அருட்தந்தை அடைக்கலசாமி அடிகளார் முன்னெடுக்கவுள்ளதுடன் குருக்கள், அருட் கன்னியர்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள் குறித்த நாட்களில் கலந்து கொள்ளவுள்ளனர் .

குறித்த கிராமத்தில் ஆண்டு திருவிழா, எதிர்வரும் எட்டாம் திகதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளமை குறிப்பிடதக்கது .
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.