துடிப்பில் சில பட்டாம் பூச்சிகளும் பூவும்!

அவன் இருதயத் துடிப்பில்
சில பட்டாம் பூச்சிகளும் பூவும்  இருப்பதை உணர்கிறான் அவலோன்

கானந் தோறும் பூஞ்செடிகள் புன்னகைப்பதை அறிகிறான்

நதியின் எண்ணமுடியா கோடுகள் போல்
அவளிடமும் எண்ண முடியா சுககானம்
இருப்பதை நினைக்கிறான்

ஒவ்வொரு பட்டாம்பூச்சிகளுக்கும் ஒவ்வொரு கதை இருப்பது போல்
ஒவ்வொரு பூக்களுக்கும்வாசம் இருப்பதுபோல்
அவள் மீதான நினைவுகளிலும்
 பல இரகசியம் சுவாலிப்பதை வரைகிறான்

எங்கோர் மரத்தில் தமக்குள் சந்தோசங்களைப் பரிமாறும் பறவகளைப் பார்த்துயிர்க்கிறது

புலையனின் கவிதை

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.