கொம்பனித்தெருவில் சடலம் மீட்பு!

கொழும்பு-02 தர்மபால மாவத்தையிலுள்ள வீடொன்றில் ஒருவர் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


நேற்றிரவு (05) 9.15 மணிக்கும் 9.40 மணிக்கும் இடைப்பட்ட வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர். ஹோமாகமவைச் சேர்ந்த 49 வயதுடைய மனோஜ் சுதர்சன பெரேரா என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸாரின் 119 எனும் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, கொம்பனித்தெரு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். எனினும், இக்கொலைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை.

சந்தேகநபரை கைது செய்யும் நோக்கில் பொலிஸார் விசாரணைகளை முடுக்கியுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.