‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’!

பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படத்தை வெகுவாகப் பாராட்டி ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத மிக முக்கியமான திரைப்படமாக கருதப்படுகிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி நடித்த இப்படம் வெகுஜன ரசனைப் போக்கை மாற்றியமைத்தது என்றால் மிகையல்ல. இப்படம் பேசிய அரசியல் இன்னமும் காத்திரமான விவாதங்களில் முக்கிய பங்காற்றி வருகின்றது.
இத்திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு. இப்படத்தில் தினேஷ், ஆனந்தி ஆகியோர் நடித்துள்ளனர். அதியன் ஆதிரை இப்படத்தை இயக்கியுள்ளார். ரஞ்சித்திடம் இணை இயக்குநராக பணியாற்றியவர் இவர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர், பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்நிலையில், அனைத்து பணிகளும் முடிவடைந்த இப்படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர் படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டினர். மேலும், படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
இப்படத்தில் ரித்விகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு இசை தென்மா. ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ இம்மாதம் திரைக்கு வரவிருக்கிறது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.