கோத்தபாய இனப்பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!
தமிழ் மக்களின் தீர்ப்பை ஏற்று புதிய ஜனாதிபதி தேசிய இனப் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றுள்ள நிலையில், இது குறித்து கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், “இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மிக அமோகமாக சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று இந்த நாட்டின் ஜனாபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சிங்கள மக்களின் ஜனநாயக பூர்வமான வாக்களிப்பையும் அதனூடாக கோட்டாபய ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வெற்றியையும் தமிழ் மக்கள் சார்பாக நாங்கள் வாழ்த்தி வரவேற்கின்றோம்.
தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக நீண்டகாலம் போராடி வந்துள்ளனர். அந்தப் போராட்டத்தில் அவர்கள் பாரிய இழப்புக்களைச் சந்தித்துள்ளனர். அதுமட்டுமன்றி, போராட்ட காலகட்டத்தில் பல்வேறுபட்ட அரசாங்கங்களினூடாக பல கசப்பான அனுபவங்களையும் எதிர்கொண்டுள்ளனர்.
ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டாலும், தமிழ் மக்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கைகளுக்கு இன்னமும் தீர்வு எட்டப்படவில்லை. அவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்து அதற்கான ஒரு மக்கள் ஆணையை வெளிப்படுத்தும் முகமாகவே தமிழ் மக்கள் ஒன்று திரண்டு வாக்களித்திருக்கின்றார்கள்.
ஆகவே தமிழ் மக்களின் ஜனநாயக தீர்ப்பை மதித்து எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புதிய ஜனாதிபதி தன்னால் இயன்ற நடவடிக்கைகளை எடுப்பார் என்று எதிர்பார்க்கின்றோம்.
தமிழ் தேசிய இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கும் யுத்தத்தினால் ஏற்பட்ட ஏனைய பல்வேறுபட்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் புதிய ஜனாதிபதி எடுக்கக்கூடிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது ஒத்துழைப்பினை வழங்கும்.
தமிழ் மக்கள் தங்களது கோரிக்கைகளுக்காக ஒன்றுதிரண்டு வாக்களித்தமைக்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றுள்ள நிலையில், இது குறித்து கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், “இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மிக அமோகமாக சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று இந்த நாட்டின் ஜனாபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சிங்கள மக்களின் ஜனநாயக பூர்வமான வாக்களிப்பையும் அதனூடாக கோட்டாபய ராஜபக்ஷ பெற்றுக்கொண்ட வெற்றியையும் தமிழ் மக்கள் சார்பாக நாங்கள் வாழ்த்தி வரவேற்கின்றோம்.
தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக நீண்டகாலம் போராடி வந்துள்ளனர். அந்தப் போராட்டத்தில் அவர்கள் பாரிய இழப்புக்களைச் சந்தித்துள்ளனர். அதுமட்டுமன்றி, போராட்ட காலகட்டத்தில் பல்வேறுபட்ட அரசாங்கங்களினூடாக பல கசப்பான அனுபவங்களையும் எதிர்கொண்டுள்ளனர்.
ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டாலும், தமிழ் மக்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கைகளுக்கு இன்னமும் தீர்வு எட்டப்படவில்லை. அவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்து அதற்கான ஒரு மக்கள் ஆணையை வெளிப்படுத்தும் முகமாகவே தமிழ் மக்கள் ஒன்று திரண்டு வாக்களித்திருக்கின்றார்கள்.
ஆகவே தமிழ் மக்களின் ஜனநாயக தீர்ப்பை மதித்து எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புதிய ஜனாதிபதி தன்னால் இயன்ற நடவடிக்கைகளை எடுப்பார் என்று எதிர்பார்க்கின்றோம்.
தமிழ் தேசிய இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கும் யுத்தத்தினால் ஏற்பட்ட ஏனைய பல்வேறுபட்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் புதிய ஜனாதிபதி எடுக்கக்கூடிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது ஒத்துழைப்பினை வழங்கும்.
தமிழ் மக்கள் தங்களது கோரிக்கைகளுக்காக ஒன்றுதிரண்டு வாக்களித்தமைக்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை