சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர் குடும்பத்துடன் பரிதாபமாக பலி!

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நாகந்தலாவ மலபத்தாவ பிரதேசத்தில் மண்சரிவில் சிக்குண்டு பரிதாபமாக பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.


தாய், தந்தை, மகன் மற்றும் மகள் ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வலப்பனை பதியபெலல்ல பிரதான வீதிக்கு அருகில் நாரந்தலாவ மலபத்தாவ பிரதேசத்தில் பிரதான வீதியுடனான பாரிய மண்மேடு நேற்றிரவு சரிந்துவிழுந்துள்ளது.

இந்த மண் சரிவில் நாரந்தலாவை பகுதியில் பிரதான வீதிக்கு கீழ் பகுதியில் அமைந்திருந்த இரண்டு வீடுகள் மீது மண் மூடியுள்ளது.

இந்த நிலையில் ஒரே வீட்டில் வசித்து வந்த தந்தை, தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் மண்ணில் புதையுண்ட நிலையில் சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இவ்வாறு சடலமான மீட்கப்பட்ட மாணவன் நாளைய தினம் கல்விப் பொதுத் தாராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.