இலங்கை – இந்தியா இணைந்து முன்னெடுக்கும் ‘மித்ர சக்தி’!!

இந்திய மற்றும் இலங்கை இராணுவத்தினர் இணைந்து முன்னெடுக்கும் ‘மித்ர சக்தி’ போர்ப் பயிற்சி இந்தியாவில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியது.


இருநாட்டு இராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போர்ப் பயிற்சி எதிர்வரும் 7ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்தியாவின் புனேவில் உள்ள குமா ஆன் முகாமில்  குறித்த போர்ப் பயிற்சி இடம்பெறுகின்றது.

ஏழாவது தடவையாக இடம்பெறும் இந்த பயிற்சி முகாமை, இலங்கை இராணுவத்தின் கெமுனு ஹேவா படையணியின் 120 வீரர்களும் இந்திய இராணுவ குமாஓன் படைத் தலைமையக படையினரை உள்ளடக்கிய குழுவும் இணைந்து முன்னெடுக்கின்றன.

குறித்த போர்ப் பயிற்சி காலத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள், இராணுவ ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்ற அனுபவங்களை இரு நாடுகளும் மேம்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.