நேட்டோ மாநாட்டிற்காக ட்ரம்ப் லண்டன் பயணம்!!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நேட்டோ மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக லண்டனை சென்றடைந்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட அவர், அதிகாலையில்; லண்டனை சென்றடைந்தார்.
நேட்டோ நாடுகளின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அங்கு சென்ற அவருக்கு, அரச அதிகாரிகள் உற்சாக வரவேற்பளித்தனர்.
அத்தோடு, இன்று நேட்டோ தலைவர்களுக்கு எலிசபெத் ராணி, பர்கிங்ஹாம் அரண்மனையில் விருந்தளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேட்டோ உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு லண்டனில் இந்த மாநாடு இன்றும் மற்றும் நாளை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ளவுள்ளார்.
அத்தோடு, நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். நாளை ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலுடன் இருதரப்பு சந்திப்பை நடத்த உள்ளார்.
அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜேர்மனி, இத்தாலி உள்ளிட்ட 29 நாடுகள் கொண்ட வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு என கூறப்படும் நேட்டோ அமைப்பு, கடந்த 1949ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் ஐந்தாம் பிரிவு உறுப்பு நாடுகளில் ஒன்றுக்கு எதிராக ஆயுதமேந்திய தாக்குதல் நடந்தால், அது அனைத்து உறுப்பினர்களுக்கும் எதிரான தாக்குதலாக கருதப்படும், மற்ற உறுப்பினர்கள் உதவ வேண்டும் தாக்கப்பட்டால், தேவைப்பட்டால் ஆயுதப்படைகளுடன் களமிறங்க வேண்டும். இதுவே இவ் ஒப்பந்தமாகும்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இன்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட அவர், அதிகாலையில்; லண்டனை சென்றடைந்தார்.
நேட்டோ நாடுகளின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அங்கு சென்ற அவருக்கு, அரச அதிகாரிகள் உற்சாக வரவேற்பளித்தனர்.
அத்தோடு, இன்று நேட்டோ தலைவர்களுக்கு எலிசபெத் ராணி, பர்கிங்ஹாம் அரண்மனையில் விருந்தளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேட்டோ உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு லண்டனில் இந்த மாநாடு இன்றும் மற்றும் நாளை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ளவுள்ளார்.
அத்தோடு, நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். நாளை ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலுடன் இருதரப்பு சந்திப்பை நடத்த உள்ளார்.
அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜேர்மனி, இத்தாலி உள்ளிட்ட 29 நாடுகள் கொண்ட வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு என கூறப்படும் நேட்டோ அமைப்பு, கடந்த 1949ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் ஐந்தாம் பிரிவு உறுப்பு நாடுகளில் ஒன்றுக்கு எதிராக ஆயுதமேந்திய தாக்குதல் நடந்தால், அது அனைத்து உறுப்பினர்களுக்கும் எதிரான தாக்குதலாக கருதப்படும், மற்ற உறுப்பினர்கள் உதவ வேண்டும் தாக்கப்பட்டால், தேவைப்பட்டால் ஆயுதப்படைகளுடன் களமிறங்க வேண்டும். இதுவே இவ் ஒப்பந்தமாகும்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை