அனைத்து கட்சிகளும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் , நாற்காலி சின்னத்தில் போட்டியிட வேண்டும்!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்த அனைத்து கட்சிகளும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் , நாற்காலி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.


ஜனாதிபதி தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்த அனைத்து கட்சிகளும் அடுத்த பொது தேர்தலில் நாற்காலி சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.

எனவே பொதுத் தேர்தலுக்கு மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதாக கூறுவது குறித்த ஒப்பந்தம் தொடர்பாக அறியாதவர்கள் அல்லது பிற தனிப்பட்ட காரணங்களை கொண்டவர்கள் எனவும் அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.

அதற்கமைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் தொடர்பாக தமது கட்சி உறுப்பினர்களை அறிவுறுத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நேற்றையதினம் பிவிதுறு ஹெல உறுமயவின் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இவற்றினை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.