அனர்த்த முகாமைத்துவம் குறித்து கலந்துரையாடல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக அனர்த்த முன்னாயத்தம் செய்யும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.


இதற்கமைய வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் அனர்த்த முன்னாயத்தம் தொடர்பான கலந்துரையாடல் செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் இன்று(வியாழக்கிழமை) நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் எம்.ஹசீர், உதவி பிரதேச செயலாளர் திருமதி,நிரூபா பிருந்தன், செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் கே.சுரேஸ்குமார், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பிரதேச திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட செயலக உத்தியோகத்தர்கள்; எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அனர்த்த முன்னாயத்தம் செய்தல் தொடர்பான விளக்கங்கள் மற்றும் ஆலோசனைகள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் முன்வைக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.