ஐ.தே.கவை எவராலும் துண்டாட முடியாது – நவீன் திசாநாயக்க!!

ஐக்கிய தேசிய கட்சியை எவராலும் துண்டாட முடியாது என முன்னாள் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘எனது தந்தை காமினி திசாநாயக்கா, லலித் அத்துலத் முதலி போன்றோர் அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுடன் முரண்பட்டு தனித்துச் செயற்பட்டு கட்சி துண்டாடப்படும் நிலைக்கு இட்டுச்சென்றனர்.

ஆனால் அன்று அவர்களால் அதில் வெற்றி பெற முடியாது போனது. ஐக்கிய தேசிய கட்சிக்குள் காணப்பட்ட ஜனநாயக மரபு காரணமாக கட்சி இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் அண்மைக்காலமாக கட்சிக்குள் சிலர் கட்சியை சின்னாபின்னப்படுத்தும் முயற்சியிலீடுபட்டு வருகின்றனர். ஜனாதிபதித் தேர்தலில் நாம் அடைந்த பின்னடைவுக்கு ஒற்றுமையின்மையும் ஒரு காரணமாகும். இதிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஜனநாயகத்தின் மீது பலம்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுப்படுத்தித் துண்டாட எவருக்கும் இடமளிக்க முடியாது.

எமக்கிடையேயான கருத்து முரண்பாடுகளை உள்ளே இருந்துதான் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். கட்சிக் கட்டுப்பாட்டை மீறிச் செயற்பட முனையக்கூடாது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.