17 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!!

கன மழை காரணமாக நாட்டின் பிரதான 17 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் நேற்றையதினம் திறந்துவிடப்பட்டுள்ளன.


தமது திணைக்களத்திற்குட்பட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தற்போது 62 வீதம் வரை அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் றங்ரேபே நீர்த்தேக்கத்தின் தாழ் நில பகுதியில் மகாவலி கங்கையைப் பயன்படுத்தும் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு ரந்தெனிகல, ரங்ரேபே நீர்த்தேக்கத்தின் பொறுப்பாளரான பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

இதன் வான் கதவுகள் திடீர் என திறக்கப்படும் என்பதனால் மகாவலி கங்கையின் நீர் மட்டம் வெகுவாக அதிகரிக்கக்கூடும் என்றும் இதன் காரணமாக அங்குள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் பொறியியலாளர் டி.எம்.தர்மதாஷ அறிவித்துள்ளார்.

இதேவேளை தற்பொழுது நிலவும் கடும் மழையின் காரணமாக பதுளை பிரதேசத்தில் உமா ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்து வருகின்ற நிலையில், ரங்பேரே நீர்த்தேக்கத்தின் வான்கதவுள் திடீர் என திறக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மினிபே, மையங்கனை மற்றும் திருகோணமலை வரையில் மகாவலி கங்கையின் இரு மருங்கிலும் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.