மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்பு!!

பாரிய மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளன.


தியத்தலாவ மற்றும் பண்டாரவளை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட ஒபாட எல்ல பகுதியில் இந்த பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த ரயில் பாதையை சீர்செய்யும் பணிகளில் ரயில் நிலைய ஊழியர்களும், தியத்தலாவ இராணுவத்தினரும் ஈடுப்பட்டுள்ளனர்.

அத்துடன் மண்சரிவு காரணமாக மலையக ரயில் பாதையின் ஊடான சேவைகள் தாமதமாகலாம் என ரயில் நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதன்காரணமாக கொழும்பிலிருந்து பதுளை நோக்கி செல்லும் ரயில் சேவைகள் அப்புத்தளை ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு, பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைஅடுத்து பயணிகளின் நலன் கருதி பண்டாரவளைக்கும், அப்புத்தளைக்கும் இடையில் பஸ் சேவை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாரிய மண்சரிவு என்பதனால் சீர்செய்யும் பணிகளில் தாமதம் ஏற்படுவதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.