காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை!!

நாட்டின் சில இடங்களில் ஒரு வகையான காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


நாட்டின் 22 மாவட்டங்களில் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது.

இதன்காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன், அதிகளவானவர்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.

இந்நிலையிலேயே சீரற்ற காலநிலை காரணமாக ஒரு வகையான காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக தொற்று நோய்கள் ஒழிப்பு பிரிவின், தொற்று நோய்கள் தொடர்பான பிரதான வைத்தியர் சுதத் சமரவீர இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.

இருமல், வயிற்றுவலி, தலைவலி, உடல் சோர்வு போன்றவையே அந்த காய்ச்சலின் அறிகுறிகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான அறிகுறிகள் காணப்படுமாயின் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.