மட்டக்களப்பு மாணவனின் கண்டுபிடிப்பு சர்வதேச கண்காட்சிக்கு தெரிவு!!

மட்டக்களப்பிற்கு பெருமை தேடித்த தந்த மாணவனின் கண்டுபிடிப்பு சர்வதேச கண்காட்சிக்கு தெரிவு செய்யப்ப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு கல்லடி வேலூர் சக்தி வித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்வி பயிலும் மாணவன் சக்திக்குமார் பிரஜித் கண்டுபிடித்த ஹம்மர் ஹெல்பெர் (Hammer Helper)கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது தாய்வானில் இடம்பெற்றுவரும் கண்டுபிடிப்பாளர்களுக்கான சர்வதேச கண்காட்சியில் பிரஜித் கண்டுபிடித்த ஹம்மர் ஹெல்பெர் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது.

இலங்கையில் விஞ்ஞானம் தொழிநுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குவினால் வருடாவருடம் நடாத்தப்படும் சகசக் நெமவும் தேசிய கண்டுபிடிப்பாளர்களுக்கான போட்டியில் மாணவன் சக்திக்குமார் பிரஜித் கண்டுபிடித்த Hammer Helper முதலிடத்தையும் தங்கப்பதக்கத்தையும் பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து இவரது கண்டுபிடிப்பு சர்வதேச கண்டுபிடிப்பாளர்கள் கண்காட்சிக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

குறித்த கண்காட்சியானது டிசம்பர் 6,7,8 ஆம் திகதிகளில் தாய்வானில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.