கடவுச்சீட்டிற்கு புகைப்படம் எடுக்கும் நடைமுறையில் மாற்றம்!!

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் தமிழ்பெண்கள் நெற்றியில் குங்குமப் பொட்டுடன் படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.


கண்டியிலுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க செல்லும் தமிழ் பெண்கள், அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையங்களில் பொட்டு அணிந்து எடுத்த புகைப்படங்களை நிராகரித்து, பொட்டு அணியாமல் மீள புகைப்படம் எடுக்கும்படி அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் விளக்கமளித்தபோதே, அதற்கான காரணங்களை குறிப்பிட்டுள்ளனர்.

சர்வதேச நியமங்களின் அடிப்படையில் இலங்கை கடவுச்சீட்டு தரப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, அந்த சர்வதேச நியமங்களிற்கு கட்டுப்பட்டு செயற்பட வேண்டுமென அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு, புதிய கடவுச்சீட்டுக்கான படம் எப்படி இருக்க வேண்டுமென்ற வழிகாட்டுதல்களை எல்லா நாடுகளிற்கும் வழங்கியுள்ளது.

இதன்படி, கடவுச்சீட்டிலுள்ள படத்தில் முகத்தில் எந்தவிதமான செயற்கை அடையாளங்களும் இருக்க முடியாது. ஆகையால் நெற்றிப் பொட்டு அணிந்து படம் எடுப்பதை தவிர்க்கும்படி சொல்கிறோம். அதிகமாக, ஐரோப்பிய நாடுகளிற்கு செல்லும் பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். அதாவது, பொட்டுடனான படத்தை கொண்டுள்ள கடவுச்சீட்டுள்ள பெண்கள், சில சமயங்களில் பொட்டு இல்லாமல் சில நாடுகளிற்கு செல்லும்போது அவர்கள் சில நாடுகளின் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நிறுத்தி வைக்கும் சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றன.

அது மட்டுமல்லாமல், அந்த நாடுகளின் விசாவை பெறுவதும் இந்த பெண்களிற்கு சவாலாக மாறி வருகிறது. இவற்றை காரணம் காட்டி, விசாக்கள் நிராகரிக்கப்பட்ட சம்பவங்களும் அதிகரிக்கின்றன. இது, அவர்களின் நன்மைக்காகவே தவிர, வேறு காரணங்கள் இல்லை என தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.