பாவக்குளத்தின் வான் கதவுகளும் திறப்பு!!

நீர்வரத்து அதிகரித்தமை காரணமாக வவுனியா, பாவற்குளத்தின் நான்கு வான் கதவுகளும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை திறக்கப்பட்டன.


வவுனியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வந்த மழை காரணமாக பாவற்குளத்தின் நீர்மட்டமானது 19 அடி 2 அங்குலமாக அதிகரித்துள்ளது.  19 அடி 4 அங்குலமே கொள்ளளவாகவுள்ள நிலையில் நீர்வரத்து அதிகரித்தமையால் தீடீரென ஏற்படும் பாதிப்பை தடுக்கும் பொருட்டு, அதன் நான்கு வான்கதவுகளும் 2 இஞ்சி திறந்து விடப்பட்டுள்ளன.

மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் பிராந்திய நீர்ப்பாசன பொறியிலாளர் கே.இமாசலன் தலைமையில் சென்ற நீர்பாசனவியலாளர்கள் பாவற்குளத்தின் நிலைமையை பார்வையிட்டதன் பின்னரே வான் கதவுகளை திறந்தனர்.

இதனால் பாவற்குளத்தில் கீழான பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு மத்திய நீர்பாசன திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.