தென்னிலங்கையைச் சேர்ந்த ஆணின் சடலம் யாழ்.குளத்தில்!!

யாழ்ப்பாணம்- புங்கன் குளம் பகுதியிலுள்ள வண்ணான் குளத்தில் இருந்து ஆண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.


இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டவர், கொழும்பு  பகுதியை சேர்ந்தவர்  (60 வயது) என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குளத்தில் சடலம் ஒன்று காணப்படுவது தொடர்பாக பிரதேச மக்கள் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த தகவலுக்கமையவே பொலிஸார் சடலத்தை கண்டெடுத்துள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் காட்டுப்பூச்சி என்ற பெயர் கொண்டு அழைக்கப்பட்ட இவரை, குடும்பத்தவர்கள் கைவிட்ட நிலையில் யாழ்ப்பாணத்திற்கு வந்து இங்கு தெரிந்தவர் ஒருவரின் வீட்டில் தங்கி இருந்துள்ளார் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.