மணமக்களுக்கு பரிசாக வெங்காயம்!!

இந்தியாவில் தற்போது வெங்காயத்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதோடு பெறுமதிவாய்ந்த பொருளாகவும் விளங்கிவருகிறது.


இதன் வெளிப்பாடாக கடலூரில் நடைபெற்ற திருமணத்தில் மணமக்களுக்கு வெங்காய பொக்கே கொடுத்த நண்பர்களின் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

 கடந்த நவம்பர் மாதம் முதல் பெய்த கனமழையின் காரணமாகக் காய்கறி விளைச்சல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெங்காய வரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை வரவழைக்க மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. வெங்காய விலை உயர்வு மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால், திருட்டுகளும் அதிகமாகி வருகின்றன.

இந்நிலையில் கடலூரில் மணமக்களுக்கு வெங்காய பொக்கே பரிசு வழங்கப்பட்ட சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று நடைபெற்ற சாகுல்-சப்ரினா என்ற மணமக்கள் திருமணத்தில் அவர்களுக்கு நண்பர்கள் வெங்காயத்தை பரிசாக அளித்து மகிழ்ந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.