நியூஸிலாந்தில் எரிமலை வெடிப்பு!!

நியூஸிலாந்தில் உள்ள வெள்ளைத் தீவில் எரிமலை வெடித்ததில் சுமார் 100பேர் வரை காணமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.


வடகிழக்கு நியூஸிலாந்து கடற்கரையில் இருந்து 30 மைல் தொலைவில் உள்ள விரிகாரி வெள்ளை தீவில் இந்த ஏரிமலை வெடிப்பு மதியம் 2:11 மணியளவில் வெடித்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

தற்போது அங்கு சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில், மீட்பு படையினர் மற்றும் இராணுவ வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டின் ஜியோநெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வெடிப்பதற்கு முன்னர் மக்கள் தீவில் இருந்ததை நாங்கள் அறிவோம், அவர்களின் பாதுகாப்பு குறித்த எங்கள் கவலையை நாங்கள் வெளிப்படுத்துகிறோம்’ என தெரிவித்துள்ளது.

இந்த வெடிப்பினால் மேலெலும்புள்ள சாம்பல் புகை, சுமார் 12,000 அடி உயரத்திற்கு தென்படுவதாக கூறப்படுகின்றது.

இதற்கிடையில், தேசிய வானிலை சேவை வெடிப்பை உறுதிசெய்து, வெடிப்பு மற்றும் அதன் சாம்பல் மேகத்தின் ராடார் மற்றும் செயற்கைக்கோள் படங்களை, தேசிய வானிலை சேவை டுவீட் செய்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.