900 ஏக்கர் மரக்கறிச் செய்கை முற்றாக அழிவு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக 900 ஏக்கரில் செய்கை பண்ணப்பட்ட மரக்கறிப் பயிர்ச்செய்கை முற்றாக அழிவடைந்துள்ளதாக மாவட்ட விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.


மிளகாய், வெண்டி, கத்தரி, பயற்றை, புடோல் உட்பட மரக்கறிப் பயிர்ச்செய்கையே இவ்வாறு அழிவடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆரையம்பதி களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப்பிரிவுகளில் அதிகமான மரக்கறிப் பயிர்கள் அழிவடைந்துள்ளதுடன் வெல்லாவெளி, செங்கலடி, கிரான், வாகரை, கொக்கட்டிச்சோலை, உட்பட பல பிரதேச செயலகப்பிரிவுகளிலும் பெருமளவிலான விவாசாயிகள் மரக்கறிப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட அடைமயினால் ஏற்பட்ட வெள்லத்தில் குறித்த பயிர்கள் அழிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.