டெங்கினால் 13 வயது சிறுமி பலி!!

திருகோணமலையில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 13 வயதான சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


திருகோணமலை நிலாவௌி வீதி, மூன்றாம் கட்டை பகுதியைச் சேர்ந்த வி.கிஷோபிதா எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறுமியின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் திருகோணமலை மாவட்டத்தில் 1733 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் திருகோணமலை மாவட்டத்தில் இந்த வார காலப்பகுதியில் மாத்திரம் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டு 136 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.