அம்பாறையில் தொடரும் மழை!!

காலநிலை மாற்றத்தின் காரணமாக அம்பாறையில் மழையின் நீட்சி தொடர்வதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


இலங்கையின் தென்கிழக்காக வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக மழை தணிந்திருந்தபோதிலும் நேற்று முதல் மீண்டும் மழையுடனான காலநிலை தொடர்கின்றது.

அம்பாறையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 15 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரகாலமாக அம்பாறை மாவட்டத்தில் பெய்து வந்த மழை வீழ்ச்சியின் அளவு அதிகரித்துக் காணப்பட்ட போதிலும் தற்போது பெய்து வரும் மழை வீழ்ச்சியின் அளவு வெகுவாக குறைவடைந்திருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

அம்பாறை மாட்டத்தில் மாலை வேளையில் கடற் கரையினை அண்டிய பகுதியில் பலத்த காற்று வீசி வருவதோடு, மழையுடனான காலநிலையால் தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ள நீர் நிறைந்து காணப்படுவதுடன் சில குடியிருப்புக்களில் நீர் நிறைந்துள்ளது.

அத்துடன் மாவட்டத்தின் சில வீதிகளில் தொடர்ந்தும் நீர் நிறைந்துள்ளதால் மக்களின் போக்குவரத்திலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக கடற்றொழில் வெகுவாக பாதிப்படைந்துள்ளது.

மேலும் விவசாய நிலங்களில் நீர் நிறைந்து காணப்படுவதால் நெல் வயல்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.