சமாதானத்தை வலியுறுத்தி யாழிலிருந்து நடைபயணம்!!

சமாதானத்தின் வேர்கள் ஆழ ஊடுருவட்டும் எனும் தலைப்பில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புவரை நடைபவணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணம், மாதகல்லில் இருந்து கொழும்பு ஜனாதிபதி அலுவலகம் வரை இந்த நடைபயணம முன்னெடுக்கப்படவுள்ளது.

போரால் பாதிக்கப்பட்டோர் அமைப்பின் தலைவர் வி.சகாதேவனினாலேயே இந்த நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாதகல் சங்கமித்தா விகாரையில் இருந்து இன்று (புதன்கிழமை) காலை  8 மணியளவில் தனது தாயின் ஆசிர்வாதத்தோடு இந்த நடை பயனத்தை அவர் ஆரம்பித்துள்ளார்.

சமாதான செய்தியை சிங்கள மக்களுக்கும் நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் வலியுறுத்தும் வகையில் குறித்த நடைபயனத்தை ஆரம்பித்துள்ளதாக சகாதேவன் தெரிவித்துள்ளார்.

நடைபயனத்தில் சகாதேவனுடன் சில ஆதரவாளர்களும் இணைந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.