கொழும்பு புறநகரில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்!

கொழும்பின் புறநகரான கடவத்தை பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடவத்தை பிரதேசத்தில் குடிநீருடன் பெற்றோல் கலந்திருப்பதால் பிரதேச மக்கள் சுத்தமான குடிநீர் பெற்றுக்கொள்வதற்கு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குழாய் கிணறு மற்றும் சிறு கிணறுகளில் இவ்வாறு எரிபொருள் தண்ணீருடன் கலந்திருப்பதாக அப்பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டிருந்தனர்.

இதனையடுத்து குறித்த பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இதுபற்றி தகவல் பெறுவதற்காக ஊடகவியலாளர்கள் சிலர் சென்றுள்ளனர்.

அப்போது ஊடகவியலாளர்களை அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தாக்கியுள்தாக கூறப்படுகின்றது.

மேலும் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடவத்தை பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.