வவுனியாவில் சிக்கலில் 5 அரச நிறுவனங்கள்!!

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை முதல் வவுனியா பொது சுகாதார பரிசோதர்களினால் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னேடுக்கப்பட்டன.


இதன் போது ஜந்துக்கு மேற்பட்ட அரச நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா நகரப்பகுதியில் டெங்கு நோயின் பரம்பல் அதிகரித்து காணப்படுவதுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் 650க்கு மேற்பட்ட டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் வவுனியா நகர் முழுவதும் பொது சுகாதார பரிசோதகர்கள் டெங்கு நோய் பரவும் வகையில் காணப்படும் இடங்கள் சோதனை செய்வதுடன் , அவற்றை அழிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுவருகின்றனர்.

அந்தவகையில் வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது டெங்கு நோய் பரவும் நிலையில் காணப்பட்ட நெல் களஞ்சியசாலை, இலங்கை மின்சார சபை , தொழிற்பயிற்சி அதிகாரசபை , தேசிய வீடமைப்பு அதிகாரசபை , அரச விடுதிகள் , பொதுமக்களின் வீடுகள் போன்றவற்றிக்கு எதிராக வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த வழக்குகள் இம்மாதம் 19 ஆம் திகதி நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.