MCC ஒப்பந்தம் மீள்பரிசீலனை செய்யப்படும் – சட்டமா அதிபர்!!

அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் நிறுவனத்தின் மானியம் குறித்து மீள்பரிசீலனை செய்யப்படும் சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.


அத்துடன், இதுவரை அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் நிறுவனத்தின் மானியம் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அபிவிருத்தி பணிகளுக்காக வழங்கப்படவிருந்த அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் நிறுவனத்தின் மானியம் நிராகரிக்கப்படவில்லை அமைச்சர் டலஸ் அழகப்பெரும நேற்றைய தினம் தெரிவித்திருந்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை, 480 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் நிறுவனத்தின் கொடைக்கு அங்கீகாரம் வழங்கியிருந்தது.

இதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டால், அரச மற்றும் தனியார்துறையில் அடையாளம் காணப்பட்ட தேவைகளுக்கு நிதியளிப்பதன் மூலம் குறைந்தது 11 மில்லியன் இலங்கையர்களுக்கு பயனளிக்கும் என இலங்கை ஆதரவை கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.