தற்கொலைக்கு முயற்சித்த பெண் கடற்படையினரால் மீட்பு!!!
காலி துறைமுகத்தில் நீரில் மூழ்கிய பெண் ஒருவரை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை அன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காலி துறைமுகத்தின் பாதுகாப்பில் இணைக்கப்பட்ட கடற்படைப் வீரர்கள், காலி துறைமுக நுழைவாயிலிலிருந்து காலி நகரத்தை நோக்கிய கடலில் ஒருவர் கடலில் மூழ்குவதை அவதானித்துள்ளனர்.
உடனடியாக, நீரில் மூழ்கிய நபரை மீட்க கடற்படை ஒரு நிவாரண குழுவை அனுப்பியது.
அதன்படி, கடலில் மூழ்கிய பெண் ஒருவர் கடற்படையால் காப்பாற்றப்பட்டுள்ளார். காப்பாற்றப்பட்ட பெண் காலியில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் கட்டடத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
அந்தப் பெண்ணுக்கு கடற்படை மருத்துவ உதவியாளர்கள் முதலுதவி அளித்தனர், மேலும் அப் பெண் மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹிக்கடுவையில் வசிக்கும் 48 வயதான பெண் ஒருவரே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ள நிலையில் குறித்த பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்ப்பாக மேலதிக விசாரணைகளை கராபிட்டி, வைத்தியசாலை பொலிஸார் மற்றும் காலி துறைமுக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை அன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காலி துறைமுகத்தின் பாதுகாப்பில் இணைக்கப்பட்ட கடற்படைப் வீரர்கள், காலி துறைமுக நுழைவாயிலிலிருந்து காலி நகரத்தை நோக்கிய கடலில் ஒருவர் கடலில் மூழ்குவதை அவதானித்துள்ளனர்.
உடனடியாக, நீரில் மூழ்கிய நபரை மீட்க கடற்படை ஒரு நிவாரண குழுவை அனுப்பியது.
அதன்படி, கடலில் மூழ்கிய பெண் ஒருவர் கடற்படையால் காப்பாற்றப்பட்டுள்ளார். காப்பாற்றப்பட்ட பெண் காலியில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் கட்டடத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
அந்தப் பெண்ணுக்கு கடற்படை மருத்துவ உதவியாளர்கள் முதலுதவி அளித்தனர், மேலும் அப் பெண் மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹிக்கடுவையில் வசிக்கும் 48 வயதான பெண் ஒருவரே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ள நிலையில் குறித்த பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்ப்பாக மேலதிக விசாரணைகளை கராபிட்டி, வைத்தியசாலை பொலிஸார் மற்றும் காலி துறைமுக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை