வானிலை ஆய்வு மையம் விடுத்த சிவப்பு எச்சரிக்கை!

வடகிழக்கு பருவமழை காரணமாக வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களில் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை அதிக மழைவீழ்ச்சி பதிவாகவும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


குறித்த திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள பகுதிகள் 100 – 150 மில்லிமீற்றல் அளவில் மலை பெய்ய கூடும் என எதிர்வுகூறியுள்ளார்.

இதேவேளை சப்பிரகமுவ மற்றும் மேல் மாகாணங்கள் மற்றும் நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களில் சில இடங்கள் 100 மி.மீ வரை மழைவீழ்ச்சி பெய்யக்கூடும் எனவும் அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன் வட-மத்திய, வடமேல், மத்திய மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் காற்றின் வேகம் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.