எதற்காக “தமிழீழ விடுதலை புலிகள்” ஆதரவாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்!!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்று அண்மையில் கைது செய்யப்பட்ட 12 பேருக்கும் முறையான நீதிமன்ற விசாரணை வேண்டும்,” என பெக்கோ சட்டமன்ற உறுப்பினர் இராமகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.


19 இயக்கங்கள் ஆதரவு தெரிவித்த மகஜர் ஒன்றை வழங்கிய பெக்கோ சட்டமன்ற உறுப்பினருமான எஸ் இராமகிருஷ்ணன், “காவல்துறையின்  அறிக்கைபடி, அந்த 12 பேரும் புலிகள் தொடர்பான பொருட்கள் (படங்கள், ஸ்டிக்கர்ஸ்) வைத்திருந்தனர், டி-சட்டைகள் அணிந்திருந்தனர், மாவீரர் நாளில் கலந்துகொண்டனர் எனக் கூறப்படுகிறது. ஆனால், அதனால் நாட்டின் பாதுகாப்பிற்கு என்ன அச்சுறுத்தல் எனத் தெரிந்துகொள்ள நாங்கள் விரும்புகிறோம்,” என்றார்.

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தினால் நம் நாட்டிற்கு அச்சுறுத்தல் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லாத பட்சத்தில், இந்த 12 பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது எதனால்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.